தருமபுர ஆதீன மிரட்டல் வழக்கு : பாஜக மாவட்ட தலைவர் ஜாமீனில் விடுதலை

தேர்தலில் போட்டியிடக் கூடாது என்பதற்காக என் மீது ஆதாரமில்லாமல் வழக்குப்பதிவு செய்து வீண்பழி சுமத்தப்பட்டுள்ளது. வழக்கில் தொடர்புடைய நான்கு பேரை பிடித்தால் உண்மை வெட்டவெளிச்சமாகும் காவல்துறை பிடிக்காவிட்டால் நான் பிடித்து குற்றமற்றவர் என்று நிருபிப்பேன் என பாஜக மாவட்ட தலைவர் அகோரம் தெரிவித்தார்.

Update: 2024-06-09 04:50 GMT

அகோரம் - தருமபுர ஆதீனம் 

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானத்தின் ஆபாச வீடியோ ஆடியோ உள்ளதாக கூறி பணம்கேட்டு மிரட்டியதாக ஆதீனத்த்தின் சகோதரர் விருத்தகிரி கடந்த பிப்ரவரி மாதம் 21ம் தேதி கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தனர் இதில் வினோத், விக்னேஷ், குடியரசு, ஸ்ரீநிவாஸ் ஆகியோர் கடந்த மாதம் ஜாமீனில் வெளிவந்தனர். மார்ச் மாதம் 16ம் தேதி கைது செய்யப்பட்ட பாஜக மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரம் மயிலாடுதுறை கிளை சிறையில் அடைக்கப்பட்டு திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.

பலமுறை ஜாமின் கேட்டு மயிலாடுதுறை நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தும் ஜாமீன் வழங்க்ப்படாத நிலையில் 7ஆம தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.  திருச்சி மத்திய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு மயிலாடுதுறைக்கு வந்த பாஜக மாவட்ட தலைவர் அகோரத்திற்கு கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள்  சித்தர்க்காடு பகுதியில் பட்டாசு வெடித்து மாலை, சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் பாஜக மாவட்ட தலைவர் அகோரம் செய்தியாளர்களை சந்தித்து  கூறுகையில்  தருமபுரம் ஆதீனத்தை கடந்த  4 மாதங்களுக்கு முன்பு நான் மிரட்டியதாக பொய்வழக்கு பதிவு செய்தனர். தருமபுரம்ஆதீனத்தின் மீது மிகப்பெரிய பற்றுவைத்துள்ளேன். பட்டணபிரவேசம் நடத்தக்கூடாது என்று திமுக அரசு தடைவிதித்தபோது 24 மணிநேரம் இரவுபகல் பாராமல் உழைத்து பட்டணபிரவேசத்தை நடத்திகாட்டினேன். சீர்காழி சட்டைநாதர் கோயிலில் செப்பேடுகள், உலோக சிலைகள் கண்டெடுத்தபோது நிர்வாகத்திற்கும், தருமை ஆதீனத்திற்கு ஒத்துழைப்பாக இருந்தேன். பாஜவிற்கும், ஆன்மீகத்திற்கு எதிராக இருக்கமாட்டோம். தேர்தலில் நிற்ககூடாது என்று என்மீது வீன்பழி சுமத்தப்பட்டது.

நான் தவறு செய்திருந்தால் அதற்கான ஆவனங்களை வெளியிட வேண்டும். பாஜவிற்கும், ஆதீனத்திற்கும் துரோகம் செய்யவில்லை. சிலதுரோகிகள் திட்டமிட்டு:அவதூராக பழிசுமத்தியிருக்கிறார்கள். என்மீது போடப்பட்ட பொய்வழக்கு குறித்து நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி, தமிழக கவர்னரை சந்திக்க உள்ளேன். என்மீது தவறான குற்றம் சுமத்தியவர்களை சட்டரீதியாக தண்டிப்பதற்கான நடவடிக்கை எடுப்பேன். இந்த வழக்கில் திமுகவை சேர்ந்தவர், அதிமுகவை சேர்ந்தவர், ஆதீன நேர்முக உதவியாளர் என்று 4 பேர் கைது செய்யப்படாமல் உள்ளனர்.

இந்த சமுதாயத்திற்கும், தருமபுர ஆதீனத்திற்கு துரோகம் செய்யாமல் ஒரு தவறு செய்யாமல் 90 நாட்கள் நான் சிறையில் இருந்துள்ளேன். எஞ்சிய 4 பேரை கைது செய்ய வேண்டும். தருமபுர ஆதீனத்தின் நேர்முக உதவியாளரை காவல்துறை பிடிக்கவில்லை. அவரைப் பிடித்தால் உலகமே சிரிப்பாய் சிரிக்கும் நீங்கள் பிடிக்க மாட்டீர்கள் நான் பிடிப்பேன்.  கைப்பற்றியதாக கூறப்படும் வீடியோ, ஆடியோ இருந்திருந்தால் ஏன் இதுவரை காவல்துறை வெளியிடவில்லை என்றார்.

Tags:    

Similar News