தருமபுர ஆதீன பட்டண பிரவேசம் : மனிதனை மனிதனே சுமப்பதா? - போராட்டம்

மயிலாடுதுறையில் தருமபுர ஆதீன மடாதிபதியின் பட்டணப்பிரவேச நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும், ஆபாச வீடியோ வழக்கை முறையாக விசாரிக்க வேண்டும் எனக் கோரி   விடுதலை சிறுத்தைகள்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-05-30 03:15 GMT

 தருமபுர ஆதீனம் வெள்ளி பல்லக்கு பவனி

மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த தருமபுர ஆதீன மடத்தில் ஆதீன மடாதிபதி சிவிகை பல்லக்கில் எழுந்தருளி பக்தர்கள் சுமந்து செல்ல பட்டணபிரதேச விழா  நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  கடந்த 2022 ஆம் ஆண்டு திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மனிதனை மனிதனே சுமக்கும் பட்டிணப்பிரவேச விழாவிற்கு தடை விதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் பட்டினபிரவேச விழாவிற்கு அப்போது இருந்த கோட்டாட்சியர் தடை விதித்த நிலையில் பின்னர் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு தடை நீக்கப்பட்டது.  சென்ற ஆண்டு பட்டன பிரவேச விழா நடைபெற்றது.  இந்த ஆண்டு தருமபுர ஆதீனம்  ஆபாச வீடியோ வழக்கில் சிக்கி உள்ளது. இந்நிலையில்  தருமபுர ஆதீன மடாதிபதி பட்டண பிரவேச விழா  இன்று (30-5-24)நடைபெற உள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் மக்கள் அதிகாரம் தமிழ் மண் தன்னுரிமை இயக்கம், உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மனிதனை மனிதனே சுமப்பதா ? என கேள்வி எழுப்பி தருமபுர ஆதீன மடாதிபதியின் பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு தமிழக அரசு உடனடியாக தடை விதிக்க கோரியும், பாரம்பரியத்தை மீறி ஆதீனம் காரில் செல்வதும் ரயிலில் செல்வதும் ஹெலிகாப்டர் செல்வதும் மரபை மீறிய தேவையாகிவிட்டது ஆகவே மனிதனை மனிதன் சுமக்கும் செயலையும் விட்டுவிட வேண்டும். தருமபுர ஆதீனத்தின் ஆபாச வீடியோ குறித்து உரிய விசாரணை செய்து தவறு இருக்கும் பட்சத்தில் ஆதீனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மயிலாடுதுறை மாவட்ட காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் ஆதீனத்தை கண்டித்தும்  கண்டன உரை மற்றும் முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News