தருமபுரம் ஆதீனம் மிரட்டல் வழக்கு - ஜாமீன் மனு தள்ளுபடி

தருமபுரம் ஆதினத்திற்கு மிரட்டல் விடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஜாமின் கோரிய கலைமகள் கல்வி நிறுவனத்தின் தாளாளர் கொடியரசின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Update: 2024-04-25 04:31 GMT

தருமபுரம் ஆதினம் 

மயிலாடுதுறை தருமபுரம் ஆதினத்தின்  தலைமை மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் தொடர்புடைய ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாக கூறி மிரட்டல் விடுத்ததாக கொடியரசு, உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கொடியரசுக்கு சர்க்கரை நோய், இருதய பாதிப்பு உள்ளது. தொடர்ந்து சிறையில் இருந்தால் உடல் நிலை மேலும் பாதிக்கப்படும் என்று மனு அளிக்கப்பட்டது.  கொடியரசின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags:    

Similar News