ரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள்: நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2024-03-30 16:29 GMT

கோப்பு படம் 

கடந்த 2016ம் ஆண்டு இயற்றப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டப்படி தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்கள் மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில்,

மாற்றியமைக்கப்படவில்லை என்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என புகார் மனுவை சென்னையைச்  சேர்ந்த வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் அளித்திருந்தார்.

தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags:    

Similar News