அதிமுகவுடன் கைகோர்க்கும் தேமுதிக!

Update: 2024-03-16 07:36 GMT

அதிமுக தேமுதிக

தேர்தல்தேதி அறிவிப்புகள் இன்று வெளியாக இருக்கும் நிலையில் அதிமுக தேமுதிக இடையே கூட்டணி உறுதியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதிமுக தேமுதிக இடையே இதுவரை இரண்டு கட்ட பேச்சு வார்த்தை நடந்து முடிந்த நிலையில் இன்று மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை மாலை நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

தேமுதிக 3 மக்களவை தொகுதிகளையும் மற்றும் ஒரு மாநிலங்களவையும் கேட்டு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

இந்நிலையில் இன்று மாலை நடைபெறும் பேச்சு வார்த்தையில் தேமுதிக எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடப்படும் என குறித்து இறுதி முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேமுதிக விருதுநகர், கள்ளக்குறிச்சி மற்றும் மேற்கு மாவட்டங்களில் இருந்து ஒரு தொகுதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.

இது குறித்து இன்று மாலை பேச்சுவார்த்தையில் உறுதி செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News