திமுக வழக்கு ஜூன் 25ஆம் தேதிக்கு தள்ளி வைப்பு

வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து சந்தேகம் எழுப்பி திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஜூன் 25 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.

Update: 2024-04-06 00:41 GMT
மக்களவை தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து சந்தேகம் எழுப்பி திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஜூன் 25 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம். எதிர்கால தேர்தலை கருத்தில் கொண்டு தான் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் விசாரணை தள்ளிவைக்கப்பட்டது. மூன்றாம் தலைமுறை வாக்குப்பதிவு இயந்திரம் 2013ம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றும், 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இதே இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், அந்த தேர்தலில் மனுதாரர் கட்சி வெற்றி பெற்றது என்றும் வழக்கை ஏற்றால் அது மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தும் எனவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News