எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக திமுக மான நஷ்ட வழக்கு

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் திமுகவை தொடர்புபடுத்தி பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்கு போடப்பட்டுள்ளது.

Update: 2024-03-15 01:46 GMT
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மானநஷ்ட ஈடு கோரி திமுக தரப்பில் வழக்கு போடப்பட்டுள்ளது. ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் அதன் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனுத்தாக்கல் செய்துள்ளார் போதைப்பொருள் பறிமுதல், கைது தொடர்பான சமீப நிகழ்வுகளில் திமுக-வை தொடர்புபடுத்தி பேசியதாகவும், திமுக கட்சியின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் வழக்கில் திமுக-வை தொடர்புபடுத்தி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தடை விதிக்கவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
Tags:    

Similar News