நாளை திமுக-மதிமுக 4 ஆம் கட்ட பேச்சுவார்த்தை ?..

திமுக கூட்டணியில் மதிமுகவுடன் நாளை நான்காம் கட்ட தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2024-03-03 07:15 GMT
அண்ணா அறிவாலயத்தில் நாளை காலை 11.00 மணிக்கு மேல் திமுக-வுடன் மதிமுக தொகுதி பங்கீடு குறித்து நான்காம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது மதிமுக-வினர் இரு  மக்களவையும், ஒரு மாநிலங்களவையும் வழங்க வேண்டும் என உறுதியாக உள்ளனர். ஆனால் திமுக-வினர் மக்களவை கொடுக்க மறுக்கின்றனர், அதன் காரணமாக பேச்சு வார்த்தை நீடித்தி வருகிறது.. மீண்டும் நாளை இரண்டு தொகுதிகள் வழங்க வேண்டும் என மதிமுகவினர் நான்காம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர். எந்நிலை வந்தாலும் கூட்டணி சின்னம் இல்லாமல் தனிச்சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என மதிமுக-வினர் உறுதியாக உள்ளனர்.
Tags:    

Similar News