பாதிக்கப் பட்டவர்களுக்கு தமிழக அரசு துணை நிற்கும் - திமுக அறிக்கை

கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவாக தமிழக அரசு இருக்கும் என திமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.

Update: 2024-06-21 16:48 GMT

திமுக

திமுக  அறிக்கையில், "கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள்! பாதிக்கப் பட்டவர்களுக்கு.. துணை நிற்கும் தமிழ்நாடு அரசு..! எடப்பாடி பழனிசாமி மாதிரி தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டை TVயில் பார்த்து தெரிந்துக்கொண்டேன் என்று எதையும் சமாளிக்கவுமில்லை..! பாஜகவை போல மணிப்பூர் கலவரம் ரயில் விபத்து.., மாணவர்களின் வாழ்கையை நிர்மூலமாக்கிய நீட் தேர்வு மோசடி போன்ற எல்லா படுபாதக செயல்களுக்கும் முட்டுக் கொடுப்பதை போல முட்டுக் கொடுக்கவுமில்லை.

களத்தில் அமைச்சர்கள் நிற்கிறார்கள். காவல்துறை தலைவர் உடனடியாக சம்பவ இடத்தில் மிகத் துரிதமான முறையில் மருத்துவ நடவடிக்கைகள் மேற்கொள்கிறார்.

அரசு..வீணான முட்டுக் கொடுக்காமல் நடந்த தவறை ஒத்துக் கொண்டு மிக துரிதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News