இஸ்லாமியர்களை திமுகவினர் ஊறுகாய் போல் பயன்படுத்துகிறார்கள்:ஏ.சி.சண்முகம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சித்தூர் கேட் பகுதியில் பாஜக வேட்பாளர் ஏசி சண்முகம் பிரச்சாரம் மேற்கொண்டார்.

Update: 2024-04-12 12:17 GMT

வாக்கு சேகரித்த ஏ.சி சண்முகம் 

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் கல்லப்பாடி, பாக்கம் மற்றும் சித்தூர் கேட் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வேட்பாளர் ஏ.சி.சண்முகத்திற்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிரச்சாரத்தில் வேட்பாளர் ஏ.சி. சண்முகம் பேசுகையில்," மோடி வருவதற்கு முன் சுமார் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நாம் வெற்றி பெற இருந்தோம். தற்போது மோடி வந்து சென்ற பிறகு 1.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். வேலூருக்கு இதுவரை எந்த பிரதமரும் வந்ததில்லை.முதல் முறையாக நரேந்திர மோடி வந்துள்ளார்.

இஸ்லாமிய மக்களுக்கு திமுக எதுவும் செய்யவில்லை.அவர்களை ஊறுகாய் போல் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.ஆகவே தாமரையை வெற்றி பெற செய்யுங்கள்," என பேசினார்.

Tags:    

Similar News