திமுக இளைஞரணி மாநாடு பணிகளை மாவட்ட செயலாளர் ஆய்வு

திமுக இளைஞரணி மாநாடு பணிகளை மாவட்ட செயலாளர் ஆய்வு செய்தனர்

Update: 2023-12-08 15:36 GMT

மாநாடு பணிகளை ஆய்வு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு வருகிற 24-ஆம் தேதி நடக்கிறது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். மாநாட்டிற்கான பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

மேலும் மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்கு இடையே திமுக சேலம் மாவட்ட செயலாளர் எஸ் ஆர் சிவலிங்கம், டி எம் செல்வகணபதி, வக்கீல் ராஜேந்திரன் எம்எல்ஏ ஆகியோர் நேரடி மேற்பார்வையில் மாநாட்டு பணிகள் நடந்து வருகின்றன.

இதற்கிடையே மாநாடு பணிகளை திமுக மாவட்ட செயலாளர்கள் கிழக்கு மாவட்ட செயலாளர் சிவலிங்கம், மேற்கு மாவட்ட செயலாளர் டி எம் செல்வகணபதி ஆகியோர் பந்தல் அமைப்பாளர் தஞ்சை சிவாவிடம் மாநாடு பணிகள் குறித்து கேட்டறிந்தனர். மேலும் பந்தல் அமைப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தினர். கார் பார்க்கிங், குடிநீர் உள்ளிட்ட வசதிகள் குறித்தும் கேட்டறிந்தனர்.

Tags:    

Similar News