தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை முதல் 1 ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2024-03-29 00:37 GMT

வறண்ட வானிலை

தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை முதல் 1 ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை 2 மற்றும் 3 ஆன தேதிகளில் பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

Advertisement

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 1 ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை அடுத்த ஐந்து தினங்களில் 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News