திருக்கோவிலூர் வணிக வளாகங்களில் டிஎஸ்பி திடீர் ஆய்வு
By : King 24X7 News (B)
Update: 2023-11-11 07:53 GMT
ஆய்வில் டிஎஸ்பி
திருக்கோவிலூர் நகர் பகுதியில் இயங்கி வரும் வணிக வளாகங்கள், திருமண மண்டபங்களில் அமைக்கப்பட்டு இருக்கும் சிசிடிவி கேமராக்கள் சாலையை கவர்ந்தவாறு செயல்படுகின்றதா என்பதை குறித்து டிஎஸ்பி மனோஜ் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது வணிக வளாகங்களில் பழுதடைந்த நிலையில் இருந்த சிசிடிவி கேமராக்களை உடனடியாக சரி செய்ய அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது உதவி ஆய்வாளர் அன்பழகன் உடன் இருந்தனர்.