வரிசையில் நின்று வாக்களித்த எடப்பாடி பழனிச்சாமி

எடப்பாடி அடுத்த சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு வீட்டிலிருந்து குடும்பத்தினருடன் நடந்து வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரிசையில் நின்று வாக்களித்தார்.

Update: 2024-04-19 03:08 GMT

வாக்களிக்க வரிசையில் நிற்கும் எடப்பாடி பழனிச்சாமி

அதிமுக பொதுச்செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவரது வாக்கை செலுத்துவதற்காக அவரது வீட்டில் இருந்து எடப்பாடி ஊராட்சி ஒன்றிய சிலுவம்பாளையம் ஊராட்சி துவக்க பள்ளி வாக்குச்சாவடி மையத்திற்கு அவரது மனைவி ராதா, மகன் மிதுன், மருமகள் திவ்யா ஆகியோருடன்  வரிசையில் நின்று காத்திருந்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார் அப்போது செய்தியாளர் சந்திப்பில் மக்கள் மற்றும் புதிய தலைமுறை வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று உங்களது வாக்கினை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
Tags:    

Similar News