சென்னையில் நாளை கல்வி கடன் வழங்கும் முகாம்

சென்னை மாவட்ட மாணவர்களுக்கான கல்வி கடன் வழங்கும் முகாம் நாளை நடைபெற உள்ளது.

Update: 2024-02-14 13:50 GMT

பைல் படம் 

தமிழ்நாடு அரசு மற்றும் வங்கிகள் இணைந்து மாணவர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக கல்வி கடன் வழங்கும் சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அதன்படி, நாளை சென்னை மாவட்டத்திற்கான மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கும் முகாம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் மாணவர்கள் கல்வி கடனுக்கான விண்ணப்பம், வருமானவரிச் சான்றிதழ், பான் கார்டு விண்ணப்பம் ஆகியவற்றை இ சேவை மையம் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Tags:    

Similar News