தேர்தல் செலவின பார்வையாளர்கள் ஊடக கண்காணிப்பு மையத்தை ஆய்வு!

ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊடக கண்காணிப்பு மையத்தை தேர்தலில் செலவின பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர்.

Update: 2024-03-20 15:28 GMT

ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊடக கண்காணிப்பு மையத்தை தேர்தலில் செலவின பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர்.


ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 24 மணி நேரம் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஊடக கண்காணிப்பு மையத்தை தேர்தல் செலவின பார்வையாளர்கள் சிவசங்கர் யாதவ் மற்றும் மேவாரம் ஓலா ஆகியோர் இன்று (20.03.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் வளர்மதி, மாவட்ட எஸ்பி கிரண் சுருதி மற்றும் வருவாய் அலுவலர் நரேஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அசோக் ஆகியோர் இருந்தனர்.
Tags:    

Similar News