ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பயிற்சி வகுப்பு
ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் தொடர்பாக பயிற்சி வகுப்பு நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-07 16:34 GMT
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான திருமதி வளர்மதி தலையில் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தல் -2024 முன்னிட்டு தேர்தல் பணிகளுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இதில் வாக்குசாவடி மற்றும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, தேர்தல் பறக்கும் படையினர் எவ்வாறு கையாள்வது குறித்தும், தேர்தல் பணிகள் கண்காணிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி, மாவட்ட ஊரக முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, கோட்டாட்சியர் பார்திமா உட்பட அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்..