ஆற்றல் வள சேமிப்பு போட்டி: மாணவர்களுக்கு பரிசு அளிப்பு

ஆற்றல் வள சேமிப்பு போட்டிகளில் வென்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பரிசு அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-12-08 13:11 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தஞ்சாவூர் மின் பகிர்மான மாவட்டம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்திய, மின்சார சேமிப்பு மற்றும் பாதுகாப்புக்கான போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வழங்கிய பரிசளிப்பு நிகழ்ச்சி குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெற்றது.  த

மிழ்நாடு அறிவியல் இயக்கமும், கல்லூரி அறிவியல் கழகமும் இணைந்து ஒருங்கிணைத்த இந்நிகழ்வில், மாவட்டம் முழுவதும் இருந்து 18 பள்ளிகளின் ஆற்றல் மன்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கல்லூரி முதல்வர் முனைவர். அ.ஜான்பீட்டர் தலைமை வகித்தார்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மேற்பார்வைபொறியாளர் நளினி, செயற்பொறியாளர் விமலா, உதவி செயற்பொறியாளர் மஞ்சுளா, கல்லூரி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பேரா மலர்விழி, விலங்கியல் துறைத்தலைவர் பேரா சந்திரகலா, ஊராட்சி மன்றத் தலைவர் மஞ்சுளா ஆகியோர் பாராட்டிப் பேசினர்.  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் நடராஜன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில துணைத்தலைவர் வெ.சுகுமாரன் ஆகியோர் பேசினர். 

முன்னதாக, அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் முருகன் வரவேற்றார். நிறைவாக, துணைத் தலைவர் முருகானந்தம் நன்றி கூறினார்.  நூல் வெளியீடு  குந்தவை நாச்சியார் அரசு கல்லூரி பேராசிரியர் வெ.சுகுமாரன் எழுதிய "எதிர்கால தலைமுறைகளுக்கான ஆற்றல் வளம்" என்னும் நூலை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் நளினி வெளியிட முதல் பிரதியை கல்லூரி முதல்வர் பேராசிரியர் ஜான்பீட்டர் பெற்றுக் கொண்டார். ஆற்றல் மன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  வி.ராஜசேகர் முடிவுகளை வெளியிட்டு வாழ்த்தினார். பள்ளிக் குழந்தைகள் அனுபவ பகிர்வு செய்தனர். விழாவில் வானவில் மன்ற தன்னார்வளர்கள், கல்லூரி அறிவியல் கழக உறுப்பினர்கள் பார்வதி, ஆர்த்தி, அட்சயா, மாணவ பேரவை நிர்வாகிகள் தானியா, சோனா, ரமா, ஜீவா, விஜயசாந்தி உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags:    

Similar News