முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கரின் முன் ஜாமீன் மனு ரத்து

கரூரில் அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன் ஜாமின் கோரிய முன்னாள் அமைச்சர் எம். ஆர் விஜயபாஸ்கர் மனு தள்ளுபடியானது.

Update: 2024-04-11 05:35 GMT

 கரூரில் அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன் ஜாமின் கோரிய முன்னாள் அமைச்சர் எம். ஆர் விஜயபாஸ்கர் மனு தள்ளுபடியானது. 

2022ம் ஆண்டு அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் மீது 27 வழக்குகள் நிலைவையில் இருப்பதாக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்குகளின் நிலவரம் குறித்து காவல்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கரூரில் நடைபெற்ற வரும் குடிமராமத்து பணிகளை தடுத்ததாகவும், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் அரசியல் காரணங்களுக்காக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்வும், முன் ஜாமீன் கோரியும் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மனு அளித்து இருந்தார் அதற்கு மறுப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது .
Tags:    

Similar News