சுங்க சாவடிகளில் கட்டண விலக்கு - ஆட்சியர் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண விலக்கு அளித்து என மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-12-25 02:52 GMT

சுங்க சாவடி 

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17 18 ஆகிய தேதியில் பெய்த கனமழை காரணமாக மாவட்டத்தில் பல்வேறு கிராமங்கள் மற்றும் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மழை நீரை வெளியேற்றும் பணியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்தில் நிவாரண பொருட்கள் தன்னார்வலர்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் வழங்கி வருகிறது. இந்த நிலையில் இந்த வாகனங்கள் சிரமமின்றி தூத்துக்குடி மாநகரக்குள் வந்து செல்வதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுங்கச்சாவடிகளுக்கு வரும் 31-ஆம் தேதி வரை கட்டண விலக்கு அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News