பிரபல யூடியூபர் பிரியாணி மேன் என்கிற அபிஷேக் ரபீ கைது !

Update: 2024-07-30 07:40 GMT

பிரியாணி மேன்

‘பிரியாணி மேன்’ என்று அழைக்கப்படும் யூடியூபர் அபிஷேக்கை பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.  

பிரியாணி மேன் என அழைக்கப்படும் யூடியூபர் அபிஷேக் நேற்று முன்தினம் தனது யூடியூப் சேனலில் நேரலையில் பேசிக்கொண்டிருக்கும்போதே துணியால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனை கண்ட அவரது நண்பர்கள் அவரை தொடர்பு கொண்டு தற்கொலை முயற்சியில் இருந்து தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவத்தையடுத்து யூடியூப் நேரலையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் அபிஷேக் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுப்பார்கள் என பேசப்பட்டது.

கடந்த ஒரு வாரமாக உணவு ரிவ்யூ செய்யும் இர்ஃபான், டெய்லர் அக்கா உள்ளிட்டோரை பிரியாணி மேன் ஆபாசமாக பேசியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் பிரியாணி மேன் அபிஷேக் ரபியை சென்னை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர். அவர் மீது பெண் ஒருவர் புகார் அளித்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு பிரிவு, தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News