பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை
பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.;
By : King 24X7 News (B)
Update: 2023-11-26 12:09 GMT
கோப்பு படம்
உளுந்துார்பேட்டை அடுத்த ஒடப்பன்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஜம்புலிங்கம், 54; விவசாயி. மதுபோதைக்கு அடிமையான இவர் அடிக்கடி குடித்து விட்டு வந்ததால் அவரது மனைவி கண்டித்தார்.
இதனால், மனமுடைந்த ஜம்புலிங்கம் நேற்று முன்தினம், பயிர்களுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். உடன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் நேற்று இரவு இறந்தார். திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.