குடியாத்தம் அருகே வயிற்று வலியால் விவசாயி தற்கொலை !
குடியாத்தம் அருகே வயிற்று வலி காரணமாக விவசாயி தற்கொலை செய்து கொண்டிருந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Update: 2024-03-19 07:07 GMT
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மீனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபி (45). இவருக்கு கடுமையான வயிற்று வலி இருந்து வந்துள்ளது. பல மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்தும் வயிற்று வலி குணமாகாத நிலையில் வீட்டிலிருந்து பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவலறிந்த குடியாத்தம் தாலுகா காவல் நிலைய போலீசார் கோபியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.