அளவுக்கு அதிகமாக மது குடித்த விவசாயி பலி
விளாத்திகுளம் அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்த விவசாயி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-06-02 12:39 GMT
பலி
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகில் உள்ள லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் காந்தி சுப்பிரமணியன் மகன் சண்முகராஜ் (45), விவசாயி. இவர் வேம்பார் ரோட்டில் உள்ள மதுபான கடையில் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விளாத்திகுளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வெங்கடேச பெருமாள் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.