பவானிசாகர் அருகே பெண் தற்கொலை

பவானிசாகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்

Update: 2024-06-12 09:15 GMT

தற்கொலை 

பவானிசாகர் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் சிவகுமார். இவருடைய மனைவி வனராணி வயது 41. கட்டிட தொழிலாளியான இவர்களது மகன் லிசன்குமார் வயது 13 பவானிசாகர் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார் .

இந்நிலையில் சிவகுமார் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். நேற்று லிசன் குமார் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று விட்டார். வீட்டில் தனியாத இருந்த வனராணியை பார்க்க வனராணியின் அக்காள் மகள் தீபா அவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது வனராணி வீட்டின் விட்டத்தில் தூக்கு போட்ட நிலையில் இருந்த அவரது உடலை பார்த்து அதிர்ச்சி அடைந்த தீபா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அதற்குள் வனராணி உயிரிழந்து விட்டார். இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து வன ராணி ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News