வெள்ள பாதிப்பில் களப்பணி - சுகாதாரப் பணியாளர்களுக்கு சான்றிதழ்

மிக்ஜாம் மற்றும் தென் மாவட்ட புயல் வெள்ள பாதிப்புகளின் போது களப்பணியாற்றிய சுகாதாரப் பணியாளர்களுக்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

Update: 2024-02-11 08:06 GMT
செவிலியர்களுக்கு சான்றிதழ் 
மிக்ஜாம் மற்றும் தென் மாவட்டங்களில் புயல் வெள்ள பாதிப்புகளின் போது களப்பணியாற்றிய சுகாதாரப் பணியாளர்களுக்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் சான்றிதழ் கேடயம் மற்றும் ரொக்க பணத்தை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். தூத்துக்குடியைச் சேர்ந்த செவிலியர் ஜெயலட்சுமி, மருத்துவமனை பணியாளர் பிராட்டியம்மாள், சென்னையை சேர்ந்த லீனா, செவிலியர் கீதா, களப்பணியாளர் பாஸ்கர், பரமேசி ஆகியோருக்கு சான்றிதழ்களை அமைச்சர் மா.சு சுப்பிரமணியன் வழங்கினார்.
Tags:    

Similar News