பேப்பர் குடோனில் தீ விபத்து - ரூ.2கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்

Update: 2023-11-07 06:32 GMT

தீயை அணைக்கும் பணி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலம் சூரமங்கலம் அருகே உள்ள மல்லமூப்பம்பட்டி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகில் சிவ கணேஷ் என்பவர் வாடகைக்கு குடோன் எடுத்து வெளிமாநிலங்களில் இருந்து பேப்பர்கள் வாங்கி ரோல் செய்து ஈரோடு கோயம்புத்தூர் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு மொத்தமாக விற்பனை செய்து வந்துள்ளார். இதனை அடுத்து இவர் நேற்று வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு குடோனை பூட்டு விட்டு சென்றுள்ளார். இன்று அதிகாலை 4:30 மணிக்கு திடீரென்று மளமளவென என தீ பற்றி எரிந்து புகை மூட்டமாக காணப்பட்டது. இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் பதறி அடித்துக் கொண்டு ஓடினர். உடனடியாக சூரமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை முற்றிலுமாக அணைத்தனர். இதனால் எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படவில்லை. இரண்டு கோடி மேல் மதிப்பிலான பேப்பர் ரோல்கள் மற்றும் இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன. குடோனில் உள்ள யுபிஎஸ்ஸில் ஏற்பட்ட ‌மின்கசிவினால்தான் இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று தீயணைப்பு துறை என தெரிவித்தனர். மேலும் விசாரணையில் அவ்வப்போது தேவைப்பட்டால் மட்டுமே குடோனை திறந்து பேப்பர்களை எடுத்து செல்வோம், இல்லையென்றால் மற்ற நேரங்களில் குடோனை பூட்டி தான் வைத்து இருப்போம் என்றும், நேற்று மாலை இதே போல் வந்து திறந்து பார்த்துவிட்டு பூட்டிச் சென்றோம்.திடீரென்று இப்படி தீ விபத்து ஏற்பட்டு விட்டது என்று தீயணைப்புத் துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News