சேலம் மருத்துவமனையில் ஏசி மின் கசிவால் தீ விபத்து - அமைச்சர்

Update: 2023-11-22 07:55 GMT

துவக்க விழா 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழக சுகாதாரத்துறை சார்பில் ஈரோடு காளிங்கராயன்பாளையத்தில் புற்றுநோய் கண்டறியும் திட்டத் தொடக்க விழா, மருத்துவ துறைக்கு 3.6 கோடி மதிப்பிலான உபகரணங்கள் வழங்குதல் மற்றும் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது. இவற்றை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் முத்துசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் , ஈரோடு, ராணிப்பேட்டை,திருப்பத்தூர், கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் புற்றுநோய் கண்டறியும் திட்டம் காணொளி மூலம் இன்று தொடங்கப்பட்டுள்ளது என்றார்.சேலம் அரசு மருத்துவமனையில் குளிர் சாதனப் பெட்டியில் ஏற்பட்ட சின்ன மின் கசிவு காரணமாக தான் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.பெரிய அளவில் பாதிப்பு இல்லை. என்றார்.

Tags:    

Similar News