ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1500 கனஅடியாக நீடிப்பு!!

தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1500 ஆயிரம் கனஅடி தண்ணீர் நீடித்து வருகிறது.;

Update: 2025-02-27 09:34 GMT

hogenakkal

கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து கடந்த ஒரு வாரமாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1500 ஆயிரம் கனஅடி தண்ணீர் நீடித்து வந்தது. மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர். காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News