முன்னாள் மேயர் சைதை துரைசாமி மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் மேயர் சைதை துரைசாமி மூச்சுத் திணறல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2024-05-28 08:27 GMT

மேயர் சைதை துரைசாமி

சென்னையின் முன்னாள் மேயரும் அதிமுகவின் முக்கிய நிர்வாகியுமான சைதை துரைசாமி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. வயது மூப்பு காரணமாக அவர் சமீப காலமாக கட்சிப் பணிகளில் ஈடுபடாமல் ஓய்வெடுத்து வருகிறார்.. இந்நிலையில், நிமோனியா காய்ச்சல் காரணமாக அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....
Tags:    

Similar News