ஏரியில் மூழ்கி உயிரிழந்த பெண்களின் உடல்களுக்கு முன்னாள் அமைச்சர் அஞ்சலி !
குடியாத்தம் பகுதியில் ஏரியில் மூழ்கி உயிரிழந்த பெண்களின் உடல்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
Update: 2024-04-01 07:12 GMT
வேலூர் மாவட்டம் ,குடியாத்தம் தங்கம் நகரைச்சேர்ந்த சங்கரின் மனைவி சரோஜா, மகள் லலிதா. ராஜேந்திரசிங் தெருவை சேர்ந்த யுவராஜ் மகள்கள் காவியா, பிரீத்தி. இவர்கள் 4 பேரும் நேற்று முன்தினம்(30.03.2024) மாலை குடியாத்தத்தை அடுத்த வேப்பூர் ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இறந்த 4 பெண்களின் உடல்கள் நேற்று (31.03.2024) வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களின் வீடுகளுக்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அப்போது, முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான கே.சி.வீரமணி, வேலூர் புறநகர் மாவட்ட செயலாளர் த.வேலழகன், நகர செயலாளர் ஜே.கே.என்.பழனி, ஒன்றிய செயலாளர்கள் டி.சிவா, எஸ்.எல்.எஸ்.வனராஜ், நகர செயலாளர் கேசவன், நகரமன்ற துணைத்தலைவர் பூங்கொடிமூர்த்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.