வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி

சென்னையில் வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுப்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-05-12 05:12 GMT

மோசடியில் ஈடுப்பட்டவர்கள் 

சென்னை, அரும்பாக்கம் பகுதியில் ஆன்லைனில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டு 2.5 லட்சத்தை அபேஸ் செய்த கும்பலை சேர்ந்த 3 பேரை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர். இவர்களுக்கு வடமாநில கும்பலுடன் தொடர்பு இருப்பதால் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வடமாநில கும்பல் இவர்களது வங்கி கணக்கில் பணத்தை பெற்றுள்ளது போலீசாரின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

Tags:    

Similar News