வட பழனி பகுதியில் போலீஸ் என கூறி ரூ.1.42 லட்சம் மோசடி

வட பழனி பகுதியில் போலீஸ் என கூறி ரூ.1.42 லட்சம் மோசடி செய்த நபரை கைது செய்ய கூறி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

Update: 2024-05-26 12:01 GMT

பண மோசடி

வடபழனி குமரன் காலனியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (52). இவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர், நான் மும்பை போலீசில் இருந்து பேசுகிறேன். நீங்கள் கூரியர் மூலம் போதைப்பொருளை அனுப்பியுள்ளிர்கள். இவ்வழக்கில் ஜாமின் பெற ரூ.1.42 லட்சம் அனுப்ப வேண்டும் என கூறியுள்ளார். இதை நம்பி ஸ்ரீதரும் பணம் அனுப்பியுள்ளார். சிறிது நேரத்துக்கு பிறகு மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த அவர் வடபழனி போலீசில் புகார் அளித்தார்.

Tags:    

Similar News