இலவச கண் சிகிச்சை முகாம்
14 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக ம்ருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்;
Update: 2023-12-11 06:49 GMT
கண் சிகிச்சை முகாம்
திருக்கோவிலூர் அடுத்த விளந்தை ஆண்கள் மேல்நிலை பள்ளியில் வெளிச்சம் அறக்கட்டளை, கிராம பொதுமக்கள் ,புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை, இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் நேற்று நடைபெற்றது. ஊராட்சி தலைவர் உமா ஒன்றிய கவுன்சிலர்கள் பார்த்தசாரதி வழக்கறிஞர் முருகன் முகாமை துவக்கி வைத்தனர். இதில் 94 பேர் கலந்து கொண்ட நிலையில் 14 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.