அருந்ததியர் காலணிக்குள் நுழைந்து இருவரை தாக்கிய அடாவடி கும்பல்

விருதுநகர் அருந்ததியர் காலணிக்குள் நுழைந்து இருவரை தாக்கிய அடாவடி கும்பல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2024-05-19 12:45 GMT
அருந்ததியர் காலணிக்குள் நுழைந்து இருவரை தாக்கிய அடாவடி கும்பல்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அருந்ததியர் காலணிக்குள் நுழைந்து இருவரை தாக்கிய அடாவடி கும்பல்., சிசிடிவி காட்சிகளை வைத்து 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறை விசாரணை.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பூவாணி கிராமத்தில் அருந்ததியர் காலணியில் வசித்து வருபவர் கண்ணன் என்ற சின்னத்தம்பி.இவர் வினித் என்பவருடன் அவரது இருசக்கர வாகனத்தில் கடந்த 17ஆம் தேதி இரவு சாலையில் சென்ற போது பூவானி காளியம்மன் தெருவில் வசித்து வரும் மாரிமுத்து என்பவர் அவரது வீட்டின் முன்பு சாலையை மறித்து அவரது காரின் முகப்பு விளக்கை எரியவிட்டபடி இருந்துள்ளார். அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற கண்ணன் என்ற சின்னத்தம்பி முகப்பு விளக்கை அணையுங்கள் கண்கள் கூசுகிறது என்று கூறியுள்ளார் அதற்கு மாரிமுத்து என்பவரும் காரினுள் அமர்ந்திருந்த வினோத் என்பவரும் தகாத வார்த்தைகளால் ஜாதியை பற்றி பேசி கண்ணன் என்ற சின்னத்தம்பி என்பவரை அடித்ததாகவும் அதன்பின்பு நேற்று 18 தேதி அன்று காலையில் மாரிமுத்து என்பவர் அவரது கூட்டாளிகளான வினோத்,தினேஷ்,தங்க முனியாண்டி,சரவணன் மற்றும் பலருடன் சேர்ந்து அருந்ததியர் காலணிக்குள் நுழைந்து கண்ணன் என்ற சின்னத்தம்பியையும் அவரது தம்பி மற்றும் தாயை அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

தாக்குதலுக்கு ஆளான கண்ணன் என்ற சின்னத்தம்பி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் சின்னத்தம்பி தங்களை அடித்த கும்பலின் சிசிடிவி காட்சிகளை காவல் நிலையத்தில் கொடுத்து புகார் அளித்ததின் அடிப்படையில் காவல்துறையினர் மாரிமுத்து அவரது கூட்டாளிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.மேலும் மாரிமுத்து என்பவர் அவரது வீட்டின் முன்பு சின்னத்தம்பி,வெற்றி, சின்னத்தம்பியின் உறவினர் மாரிமுத்து 3 பேரும் தன்னை தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்து அவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி ஆகியுள்ளார். நகர் காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து அருந்ததியர் காலனிகள் நுழைந்து சின்னத்தம்பி அவரது தாய் மற்றும் தம்பியை தாக்கிய மாரிமுத்து மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வழக்கு பதிவு செய்து வினோத் என்பவரை மட்டும் கைது செய்தனர். மேலும் தலைமறைவான நபர்களை தேடி வரும் நிலையில் இந்த அடிதடி சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News