கோட்டை அபய வரதராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அபய வரதராஜ பெருமாள் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கருட சேவை நடைப்பெற்றது.

Update: 2024-04-24 16:44 GMT

கருட சேவை

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் அமைந்துள்ள பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட கோட்டை அபய வரதராஜ பெருமாள் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திரு அவதார திரு நட்சத்திர வைபவம் நடைபெற்றது. இதில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பல வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மங்கல வாத்தியங்கள் முழங்க மகா தீபாராதனை, நடைபெற்றது.

அதனை தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம், சாத்துமுறை நடந்தது. பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.கருட சேவை நடந்தது. வரதராஜ பெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News