கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு கோவா முதல்வர் மாலை அணிவித்து மரியாதை

பசும்பொன் ஜெயந்தியை முன்னிட்டு கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்குக் கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

Update: 2023-10-30 06:13 GMT

தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சுதந்திர போராட்ட தியாகி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116 வது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவுருவ சிலைக்கு கோவா மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.தொடர்ந்து தெப்பக்குளம் பகுதியில் உள்ள மாமன்னர் மருது சகோதரர்கள் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை பேசும் போது தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று வாழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிந்து மரியாதை செலுத்தியது நமது கடமை என பேசினார். மதுரை வந்த கோவா மாநில முதல்வர் மற்றும் அண்ணாமலை ஆகியோரை மதுரை மாநகர் பாஜகவினர் உற்சாகமாக வரவேற்றனர்.
Tags:    

Similar News