சன்பீம் இன்டர்நேஷனல் பள்ளியில் பட்டமளிப்பு விழா!
காட்பாடி பகுதியில் உள்ள சன்பீம் இன்டர்நேஷனல் பள்ளியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.;
By : King 24x7 Angel
Update: 2024-03-29 09:29 GMT
பட்டமளிப்பு விழா
வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் சன்பீம் இன்டர்நேஷனல் பள்ளியின் பட்டமளிப்பு விழா மற்றும் முதலாம் ஆண்டு விழா நடந்தது. விழாவுக்கு சன்பீம் பள்ளிகளின் தலைவர் டி.ஹரிகோபாலன் தலைமை தாங்கினார். மாணவிகள் ருத்வி ஷியாமளா, தேவர்ஷினி பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினர். சிறப்பு விருந்தினராக உட்சுரப்பியல் நிபுணர் டாக்டர். எம்.எஸ்.சேஷாத்ரி கலந்து கொண்டு பேசுகையில், குழந்தைகளுக்கு உள்ளார்ந்த படைப்பாற்றல், கற்பனைத்திறன், விடாமுயற்சி, மன்னிக்கும் உன்னத பண்பு, நுண்ணறிவு பகிர்தல் உள்ளிட்ட குணநலன்கள் தேவை என்றார். விழாவில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.