குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு - மார்ச் 26 முதல் நேர்காணல்

குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மார்ச் 26 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நேர்காணல் நடைபெற உள்ளது.

Update: 2024-03-07 13:17 GMT

நேர்காணல் 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடத்தப்பட்ட குரூப் 1 பிரதான தேர்வு முடிவுகள் வெளியீடு. துணை ஆட்சியர், காவல் துணை, கண்காணிப்பாளர் வணிகவரித்துறை உதவி ஆணையர் பதவிகளுக்கு தேர்வு நடத்தப்பட்டது. தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 95 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வுகள் அறிவிப்பு கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடைபெற்றது.

தொடர்ந்து, முதல்நிலைத் தோ்வு கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி நடைபெற்றது. அதன் முடிவுகள் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியானது. இதைத் தொடர்ந்து, குரூப் 1 முதன்மை தேர்வுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்டன. 1,333 ஆண்கள், 780 பெண்கள் என மொத்தம் 2,113 பேர் இந்த தேர்வை எழுதினர். இவர்களுக்கான நேர்காணல் மார்ச் 26 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

Tags:    

Similar News