நிரம்பியது குண்டாறு நீா்த்தேக்கம் - விவசாயிகள் மகிழ்ச்சி

Update: 2023-12-19 03:01 GMT

குண்டாறு நீா்த்தேக்கம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தென்காசி மாவட்டம் செங்கோட்டை குண்டாறு நீா்த்தேக்கம் முழுக் கொள்ளவை எட்டியதையடுத்து அணைக்கு வரும் நீா் முழுவதும் திறந்துவிடப்படுகிறது. மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் செங்கோட்டை அருகே அமைந்துள்ளது குண்டாறு நீா்த்தேக்கம். இந்த அணையின் மொத்த கொள்ளளவு 36.1அடியாகும். தற்போது அணைக்கு 560கன அடி தண்ணீா் வந்துகொண்டிருக்கிறது. நீா்த்தேக்கம் முழுவதும் நிரம்பியதால் அணைக்கு வரும் தண்ணீா் முழுவதும் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த அணையின் மூலம் 731ஏக்கா் நிலங்கள் நேரடியாகவும்,391ஏக்கா் நிலங்கள் மறைமுகமாகவும் என மொத்தம் 1,122 ஏக்கா் நிலங்கள் பாசனம் பெறுகின்றன.
Tags:    

Similar News