குட்கா விவகாரம்: ஸ்டாலின் & திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்கு!

Update: 2024-07-31 09:10 GMT

ஸ்டாலின் 

தமிழ்நாடு சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்துச் சென்றதற்காக திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

உரிமை மீறல் நோட்டீஸ் குறித்து மீண்டும் சபாநாயகர் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் குட்கா விற்பனை நடைபெறுவதை சுட்டிக்காட்டுவதற்கு, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் பேரவைக்குள் குட்கா பொருட்களை எடுத்துச் சென்றனர்.

அதிமுக ஆட்சியில் சட்டசபைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா கொண்டு வந்தது தொடர்பாக, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இந்த நோட்டீசை உயர்நீதிமன்றம் ஐகோர்ட்டை இரு முறை ரத்து செய்தது. இதை எதிர்த்து அதிமுக ஆட்சியில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இது நிலுவையில் இருந்தது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று முன்தினம்( ஜூலை29) மீண்டும் விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து தீர்ப்பு இன்றைய தினத்திற்கு( ஜூலை 31) நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

நீதிபதிகள் இன்று, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததுடன், உரிமை மீறல் நோட்டீசுக்கு முதல்வர் உள்ளிட்ட 17 தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சபாநாயகரிடம் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News