காரில் வட்டாச்சியர் போர்டுடன் குட்கா கடத்தல்

காவேரிப்பாக்கம் அருகே வட்டாட்சியர் போர்டுடன் காரில் குட்கா கடத்தி வந்த மர்ம நபர்கள் போலீசாரை கண்டதும் தப்பியோடினர்.காரில் கடத்திவரப்பட்ட 500 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2024-01-10 06:38 GMT

பறிமுதல் செய்யப்பட்ட கார் 

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அருகே உள்ள அவளுர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட சித்தஞ்சி பகுதியில் உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காவல் உதவி ஆய்வாளர் அருண்மொழி தலைமையிலான காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபடுக் கொண்டு இருந்தபோது, அவ்வழியாக வட்டாட்சியர் என பெயருடன் சந்தேகத்துக்கும் வகையில் வந்த எட்டியாஸ் சொகுசு கார் நிறுத்திய போது போலிசாரை கண்டதும் சொகுசு காரில் வந்த மூன்று பேர் தப்பியோடினர். மேலும் போலிசார் காரை சோதனை செய்ததில் அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 500 கிலோ குட்கா மற்றும் சொகுசு காரை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய மர்ம நபர்களை போலிசார் தேடி வருவதோடு வாகனம் உரிமையாளர் விவரம் குறித்தும் எங்கிருந்து குட்காவை கடத்தி வரப்பட்டது என பல்வேறு கோணங்களில் போலிசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்..
Tags:    

Similar News