கையோடு கைகோர்ப்போம் வாகன பேரணி: செல்வப்பெருந்தகை தொடங்கி வைப்பு

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் இனாமுல் ஹசன் தலைமையில் தமிழகம் தழுவிய கையோடு கை கோர்ப்போம் என்ற வாகன பேரணி பயணத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை துவக்கி வைத்தார்.

Update: 2024-03-02 10:21 GMT

பேரணியை தொடங்கி வைத்த செல்வ பெருந்தகை

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் தேசிய தலைவர் மீனாட்சி நடராஜன் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளரும், தமிழ்நாடு ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் அமைப்பை சேர்ந்தவருமான இனாமுல் ஹசன் தலைமையில் தமிழகம் தழுவிய கையோடு கை கோர்ப்போம் என்ற வாகன பேரணி பயணத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை துவக்கி வைத்தார். மார்ச் 1 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர் , மார்ச் 2 ஆம் தேதி காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்கள், மார்ச் 3ஆம் தேதி வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்கள் என பல்வேறு மாவட்டங்களில் மார்ச் 14ஆம் தேதி வரை இந்த வாகன பேரணி நடைபெற உள்ளது.

கிராமம்தோறும் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளையும், வரும் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டிய அவசியத்தை விளக்கியும், கடந்த கால காங்கிரஸ் ஆட்சியின் மக்கள் ஆதரவு சட்டங்களையும், திட்டங்களையும் விளக்கியும், பாஜக மற்றும் மோடியின் 10 ஆண்டுகால மக்கள் விரோத ஆட்சி, விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள்,

தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு ஒடுக்கப்பட்ட சமூகங்களின் மீது நடத்திவரும் அடக்குமுறைகளையும் அத்துமீறல்களையும் விளக்கிச் சொல்லுமாறு அமையும் என்று தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News