குமரியில் இன்றும் கன மழை - வானிலை மையம்

Update: 2023-12-18 02:49 GMT
நேற்றைய மழையால் வெள்ளம்.
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்றைய மழையில் நாகர்கோவில், கன்னியாகுமாரி மற்றும் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.  அணைகளில் இருந்து  10 ஆயிரம் கன அடி வரை உபரி நீர்  திறந்து விடப்பட்டது.  இதனால் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி பல பகுதிகள் நீருக்குள் மூழ்கி உள்ளன.   இந்த நிலையில் இன்று தென் கடலோர பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் அதிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும்  என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாவட்ட நிர்வாகம் முன்னேற்படுகளை தீவிரமாக நடத்தி வருகிறது.
Tags:    

Similar News