பெண்களின் பாதுகாப்பு நடவடிக்கைக்காக தமிழக அரசுக்கு நீதிமன்றம் பாராட்டு

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்புக்காக நடவடிக்கைகள் எடுத்துள்ள தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்ததுள்ளது.

Update: 2024-06-29 04:18 GMT
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்புக்காக நடவடிக்கைகள் எடுத்துள்ள தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்தது சென்னை உயர் நீதிமன்றம். பெண்களுக்கான திட்டங்கள் குறித்து அவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் விளம்பரப்படுத்தப்பட்டதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பெண்கள் பாதுகாப்பு குறித்து உரிய வகையில் விளம்பரப்படுத்தப்படும் என்று அரசு தரப்பு பதிலளித்தது. தமிழகத்தில் உள்ள பிரதான பேருந்து, ரயில் நிலையங்களில் பெண்களுக்கான காவல் நிலையத்துடன் கூடிய பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்க கோரி பெண் வழக்கறிஞர்கள் கனிமொழி மதி, காந்திமதி, ரமாமணி, வாசுகி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் கூட்டாக தொடர்ந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது.
Tags:    

Similar News