சந்தேகத்தால் மனைவியை கொலை செய்ய முயன்ற கணவன்

மயிலாடுதுறை அருகே மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் கொலை செய்ய முயன்ற கணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-01-25 13:04 GMT

கணவன் கைது

மயிலாடுதுறை அருகே உள்ள கீழ பெரம்பூர் தோப்புத்தெருவை சேர்ந்தவர் உத்திராபதி மகன் அழகிரி(51). இவருக்கு விமலா(43) என்ற 2வது மனைவி உள்ளார். வேலைக்குச் சென்று திரும்பும் அழகிரி குடிபோதையில் வீட்டிற்கு சென்றதும் மனைவி விமலாவை அழைத்து சந்தேகப்பட்டு திட்டுவார், மனைவி எதிர்த்துப் பேசினால் அவரை அடித்து உதைத்துவிடுவார். இது தினந்தோறும் நடந்து வருகிறது. சம்பவ தினத்தன்று அழகிரி குடிபோதையில் வீட்டிற்கு சென்று மனைவி விமலாவிடம் வழக்கம்போல் சந்தேகப்பட்டு கேட்டுள்ளார்.

அதற்குக் கோபமாக விமலா பதில் அளித்துள்ளார், இதனால் ஆத்திர்மடைந்த அழகிரி அருகில் கிடந்த அரிவாளை எடுத்து விமலா முதுகில் மற்றும் உடலில் குத்திக் கொல்ல முயற்சித்துள்ளார். ,இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் காயமடைந்த விமலாவை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர் அளித்த புகாரின்பேரில் பெரம்பூர் போலீசார்வழக்குப் பதிவுசெய்து அழகிரியை கைதுசெய்து காவலில் அடைத்தனர்.

Tags:    

Similar News