"கோவை சிறையில் நான் கொல்லப்படுவேன்'' - சவுக்கு சங்கர் குமுறல் !

Update: 2024-05-13 06:58 GMT

 சவுக்கு சங்கர் 

காவல்துறையினரை அவதூறாக பேசிய வழக்கில் கைதான சவுக்கு சங்கர் மீண்டும் கஞ்சா, மோசடி உள்ளிட்ட வழக்குகளில் கைதானார். தொடர்ந்து பல்வேறு வழக்குகள் அவர் மீது பதியப்பட்டுள்ளன.

பின்னர் அவருக்கு கைகளில் அடிபட்டு காணப்பட்ட நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி அவர் கோவை சிறையில் இருந்து கோவை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார்.

அங்கு அவருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டு வலது கையில் மீண்டும் மாவு கட்டு போடப்பட்டது. தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சவுக்கு சங்கரை காவல்துறையினர் காவல் வாகனத்தில் ஏற்ற போலீசார் அழைத்துச் சென்றனர்.

அப்போது செய்தியாளர்களைப் பார்த்த சவுக்கு சங்கர், "கோவை சிறையில் நான் கொல்லப்படுவேன். கோவை சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் எனது கையை உடைத்தார்.'' என முழக்கமிட்டார். பின்னர் காவல்துறையினர் அவரை அழைத்துச் சென்றனர்.

பரிசோதனையின் பின்பு சவுக்கு சங்கர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார். கோவை போலீசார் அளித்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற இருக்கிறது.

Tags:    

Similar News