குற்ற வழக்குகள் தொடர்பாக ஆதாரங்கள் கிடைத்தால் விசாரணை நடத்தலாம்

குற்ற வழக்குகள் தொடர்பாக ஆதாரங்கள் குறித்து தெரியவந்தால், நீதிமன்ற அனுமதியுடன் காவல் துறையினர் மேல் விசாரணை நடத்தலாம் என்று அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

Update: 2024-06-08 05:22 GMT

குற்ற வழக்குகள் தொடர்பாக ஆதாரங்கள் குறித்து தெரியவந்தால், நீதிமன்ற அனுமதியுடன் காவல் துறையினர் மேல் விசாரணை நடத்தலாம் என்று அரசு தரப்பு தெரிவித்துள்ளது.


அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் வாதம் துவக்கம். குற்ற வழக்குகள் தொடர்பாக புதிய தகவல்கள், ஆதாரங்கள் குறித்து தெரியவந்தால், நீதிமன்ற அனுமதியுடன் காவல் துறையினர் மேல் விசாரணை நடத்தலாம் என்று அரசு தரப்பு தெரிவித்தது. உண்மையான நீதி வழங்குவதற்காகவே மேல் விசாரணை நடத்தப்படுகிறது, அப்பாவிகள் தண்டிக்கப்படக் கூடாது என்பதற்காகவும், குற்றவாளிகள் தப்பித்து விடக் கூடாது என்பதற்காகவும் மேல் விசாரணைகள் நடத்தப்படுகின்றன என்றும் அரசு தரப்பு தெரிவித்தது.
Tags:    

Similar News