மோடி மீண்டும் பிரதமரானால் கேஸ் விலை ரூ 2000 - மாணிக்கம் தாகூர்

ஒவ்வொரு தங்கைக்கும், அண்ணன் கொடுப்பது போல மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி வருகின்றார். மோடி மீண்டும் பிரதமரானால் கேஸ் சிலிண்டர் விலை ரூ.2000 ஆக உயரும் என மாணிக்கம்தாகூர் எம்.பி தெரிவித்தார்.

Update: 2024-04-05 07:11 GMT

மாணிக்கம்தாகூர் எம்.பி பிரசாரம் 

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் 4-வது முறையாக போட்டியிடும் மாணிக்கம்தாகூர் எம்.பி. சிவகாசி சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பிரசாரம் செய்தார்.முன்னதாக திருத்தங்கல் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்

.பின்னர் கருநெல்லி நாதர் சுவாமி கோவில் முன்பு பிரச்சாரம் செய்தார்.அப்போது அவர் பேசியதாவது:-இந்த தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்துள்ளேன்.தமிழகத்தில் மகளிர்க்காக ஒரு மகத்தான திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்து செயல்படுத்தி வருகின்றார். அந்தத் திட்டம் ஒவ்வொரு தங்கைக்கும், அண்ணன் கொடுப்பது போல மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கி வருகின்றார்.

இந்த பகுதியில் எத்தனை பேருக்கு உரிமை தொகை வழங்கப்பட்டு வருகின்றது. தயவு செய்து கையை உயர்த்துங்கள் பார்க்லாம்.எல்லோருக்கும் வந்திருக்கின்றது மகிழ்ச்சியாக உள்ளது.மோடி மீண்டும் பிரதமராக வந்தால் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.2000 ஆக உயர்ந்து விடும்.இவ்வாறு அவர் பேசினார்.பிரச்சாரத்தில் அசோகன் எம்.எல்.ஏ., மேயர் சங்கீதா இன்பம்,துணை மேயர் விக்னேஷ் ப்ரியா, மாமன்ற உறுப்பினர்கள் உள்பட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News