பல்நோக்கு மைய கட்டடம் திறப்பு - அமைச்சர் சேகர் பாபு திறந்து வைத்தார்
32.45 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பல்நோக்கு மைய கட்டடத்தை திறந்து அமைச்சர் சேகர் பாபு திறந்து வைத்தார்.;
Update: 2024-03-04 05:35 GMT
அமைச்சர் சேகர் பாபு
சென்னை திரு.வி.க நகரில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று (03.03.2024) திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு- 71 உட்பட்ட எஸ்.பி.ஐ காலனியில் மாமன்ற உறுப்பினர் நிதி ரூ 32.45 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பல்நோக்கு மைய கட்டடத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மேயர் பிரியா, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, திரு.வி.க நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, மண்டலக் குழுத் தலைவர் திருமதி சரிதா மகேஷ்குமார், மாமன்ற உறுப்பினர் புனிதவதி எத்திராசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்